search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாக பணிகள்"

    ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.#NGTSterliteCommittee #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt
    தமிழக அரசால் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்பாயம் அனுமதி அளித்துள்ளது. #Sterlite #SterliteClosureOrder #Vedanta #NGT
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்திருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் முறையிட்டிருந்தது.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும், ஆலையால் மாசு ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆலையை பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இதற்காக மின்இணைப்பு வழங்கப்படவேண்டும் என்றும் ஸ்டெர்லைட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும், நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஸ்டெர்லைட் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆலையில் அமிலக் கசிவை கண்காணிப்பதற்கான தனி அதிகாரியை பரிந்துரைக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுமதியும் அளித்தது.

    ஆலையால் மாசு ஏற்படுவதாக கூறும் தமிழக அரசு, அதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அப்போது, மாசு தொடர்பான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கு 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Sterlite #SterliteClosureOrder #Vedanta #NGT
    ×